பெற்றோரின் உரிமைகளும் பொறுப்புகளும்

நீங்கள் குழந்தைப்பேறு பெற்றால், உடனடியாக பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பைத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால் குழந்தையின் பராமரிப்பு தானாகவே முறைப்படுத்தப்படுகிறது. நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நீங்களே குழந்தையின் பராமரிப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிறப்பைப் பதிதல்

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் நீங்கள் பதிவாளர் அலுவலகத்தில் (Zivilstandsamt) பதிவு செய்ய வேண்டும். எச்சரிக்கை: உங்கள் குழந்தை பிறந்த இடத்தில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். எனவே நீங்கள் வசிக்கும் நகராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

குழந்தை மருத்துவமனையில் பிறக்கிறது:
மருத்துவமனை ஆவணங்களைப் பதிவாளர் அலுகத்திற்கு அனுப்புகிறது. இனி நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

குழந்தை மருத்துவமனையில் பிறக்கவில்லை:
நீங்கள் வீட்டில் அல்லது வேறு எங்காவது உங்கள் குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள். அப்படியானால் நீங்களே தான் பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பைப் பதிவு செய்ய வேண்டும். இதைச் செய்ய உங்களுக்கு மூன்று நாட்கள் உள்ளன. நீங்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைப் பதிவாளர் அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும்.

தெரிந்து கொள்வது நல்லது:
ஒரு குழந்தை சுவிட்சர்லாந்தில் பிறப்பது மூலமாக அது சுவிட்சர்லாந்தின் குடிமகனாகவோ அல்லது குடிமகளாகவோ ஆக முடியாது. அது தானாகவே சுவிஸ் குடியுரிமையைப் பெற முடியாது

தந்தைக்கான அங்கீகாரம்

உங்களுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தையைப் பெறுகிறீர்கள்:
கணவர் தானாகவே தந்தையாக பதிவு செய்யப்படுகிறார். ஒருவேளை கணவர் தான் தந்தை அல்ல என்று நம்புகிறார் எனில் அவர் நீதிமன்றத்திற்குச் சென்று தன் தந்தைமையை மறுக்கலாம்.

உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை, குழந்தையைப் பெறுகிறீர்கள்:
குழந்தையின் தந்தை தானாகவே தந்தையாகப் பதிவு செய்யப்படமாட்டார். அவர் குழந்தையின் பிறப்புக்கு முன் அல்லது பிறப்பிற்குப் பின் பதிவு அலுவலகத்திற்குச் சென்று குழந்தையை அங்கீகரிக்க வேண்டும். ஒருவேளை தந்தை தனது குழந்தையை அங்கீகரிக்க விரும்பவில்லை என்றால், பின் தாய் நீதிமன்றத்திற்குச் சென்று குழந்தையை அங்கீகரிக்குமாறு அங்கு அவரிடம் கோரலாம்.

பெற்றோரின் அக்கறை

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகள் நலமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இது உங்கள் உரிமை மற்றும் கடமை (பெற்றோர் பொறுப்பு,, elterliche Sorge). உதாரணமாக நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும், அவர்கள் வாழ்க்கைக்கான செலவுகளைச் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு 18 வயது ஆகும் வரை நீங்கள் உங்கள் குழந்தைகளைச் சட்டபூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

நீங்கள் திருமணம் ஆனவர்கள்:
உங்கள் பிள்ளைகள் மேல் உங்கள் இருவருக்கும் ஒரே உரிமைகளும் கடமைகளும் உள்ளன.

உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை:
முதலில் தந்தை குழந்தையை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள விரும்புவதாக (gemeinsame elterliche Sorge) எழுத்துப்பூர்வமாக இருவரும் தானாக முன்வந்து அறிவிக்கலாம். பதிவு அலுவலகத்தில் தந்தை குழந்தையை அங்கீகரிக்கும் நேரத்தில், நீங்கள் இதைச் செய்யலாம். அல்லது பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (Kindesschutzbehörde, கே.இ.எஸ்.பி) செல்லலாம்.

இந்தக் குழந்தை பராமரிப்பிற்கு நீங்கள் உடன்படவில்லை என்றால், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதை முடிவு செய்யும்

பராமரிப்பு

நீங்கள் பிரிந்திருந்தாலும், நீங்கள் இருவரும் உங்கள் குழந்தையைத்் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள், யார் எவ்வளவு பணம் செலுத்துவார்கள் (பராமரிப்பு, Unterhalt).என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

நீங்கள் இருவரும் உங்கள் குழந்தையின் பராமரிப்புக்கு பணம் செலுத்துகிறீர்கள். நீங்கள் மற்ற பெற்றோரை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் மற்ற பெற்றோரை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்த வேண்டியிருக்கும். அல்லது நீங்கள் ஒன்றும் செலுத்த வேண்டியதில்லை.
நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் மற்றும் குழந்தையை எவ்வளவு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. மற்ற பெற்றோருடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

ஏதேனும் ஒரு பெற்றோர் தங்கள் பங்களிப்பை செலுத்தவில்லை:
பெற்றோரில் ஒருவர் குழந்தைக்கான பங்களிப்பைச் செலுத்தவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் நகராட்சியில் உதவி கேட்கலாம். நீங்கள் வசிக்கும் நகராட்சி பணத்தைப் பெற உங்களுக்கு உதவும். ஒருவேளை அது உங்கள் பணமாக இருந்தால், குழந்தை பராமரிப்புக்கு நகராட்சி பணத்தை ஒதுக்கும். இது Alimentenbevorschussung என்று அழைக்கப்படுகிறது.